ஆப்நகரம்

மேலும் ஒரு சலுகை கிடைச்சாச்சு - தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வு!

அடுத்தகட்ட தளர்வு தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 22 Nov 2020, 2:01 pm
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின்னர் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில் இன்று மேலும் ஒரு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
Samayam Tamil TN Govt


இவற்றை மூடிய அரங்குகளில் நடத்தினால் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அதுவே திறந்த வெளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் என்றால் போதிய சரீர இடைவெளி விட்டு அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்கலாம்.

இதற்காக காவல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இவ்வாறு கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். போதிய சரீர இடைவெளி விட்டு அமர வேண்டும்.

மாவட்டத்திற்கு ஒரு சீட்; தமிழகத்தை வளைக்க ஸ்கெட்ச் போடும் பாஜக!

உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதேசமயம் சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சமூக, அரசியல், கலாச்சார, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு நவம்பர் 16ஆம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் நவம்பர் 13ஆம் தேதி திடீரென தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி