ஆப்நகரம்

சுய உதவிக்குழு கடன் ரத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2021, 7:08 am
மகளிர் சுய உதவுக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil mk stalin


திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. கொரோனா நெருக்கடி, நிதி நெருக்கடி, தற்போது மழை வெள்ளம் பாதிப்பு ஆகியவற்றால் சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதமாகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை ரத்து செய்யப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு: முடிவை மாற்றியதா தமிழக அரசு?
இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை 7 சதவீத வட்டியுடன் அடுத்த 4 ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு: மாணவர்கள் ஹேப்பி!
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் உடனடியாக செயல்படுத்திய ஐந்து திட்டங்களில் ஒன்று, அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி. இந்த திட்டம் பெண்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்பட்டது.

தற்போது மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்பை பெற்று வருகிறது.
அன்வர் ராஜாவை தொடர்ந்து செல்லூர் ராஜு: ஆடியோவில் சிக்கிய மாஜி!
இதேபோல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பெண்கள், பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அடுத்த செய்தி