ஆப்நகரம்

இனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி!

சென்னை தவிர பிற மாவட்டங்களில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 May 2020, 9:49 am
பொது முடக்கத்திலிருந்து ஒவ்வொரு துறைக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் ஆட்டோக்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் சலூன் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil salons and spas


தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி முதல் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களிலும் சலூன் கடைகள் திறக்க வழிவகை செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை முதல் சென்னை பெருநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோக்களுக்கு கிரீன் சிக்னல்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் இயங்கலாம் என்றும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் இயங்கக் கூடாது என்றும், அந்தப் பகுதிகளிலிருந்து வரும் ஊழியர்களை பணிகளில் அமர்த்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு கை கழுவ வேண்டும், கையுறை மற்றும் முகக் கவசங்கள் அணிந்து பணியாற்ற வேண்டும், கடைகளில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினியை தெளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி