ஆப்நகரம்

தீபாவளி பண்டிகை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு நச் அறிவிப்பு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 26 Oct 2021, 11:25 am
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil mk stalin


ஒவ்வொரு மாதமும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் இந்த பொருள்கள் பல குடும்பங்களின் பசியை போக்கி வருகிறது.

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாத மளிகைப் பொருள்களை விரைவாக அளிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பதாக சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தது.

ஹேப்பி மூடில் சசிகலா: எடப்பாடிக்கு கட்டம் கட்டும் தென் மண்டல மாஜிக்கள்?

தற்போது தீபாவளிப் பண்டிகைக்கு அனைத்துப் பொருள்களும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நவம்பர் 1, 2, 3 ஆகிய நாள்களில் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி திறந்திருக்கும் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மகனுக்கு பதவி: தேடி வரும் வைகோவின் தம்பி!
அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பல பொருள்கள் வழங்கப்படுவதால் தீபாவளிப் பண்டிகைக்கு பலகாரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்கிறார்கள். காலை 8 முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்பதால் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.

தமிழக அரசு நேற்று அறிவித்த மற்றொரு அறிவிப்பில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது கணவர் தரப்பிலிருந்து போதிய ஆவணங்கள் தரப்படவில்லை என்றாலும் எளிய முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி