ஆப்நகரம்

பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடாதது ஏன்? கருணாநிதி கேள்வி

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பது ஏன் என்று, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 12 Jul 2016, 4:56 pm
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பது ஏன் என்று, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil tamil nadu govt is protecting foreshore estate liquor shop karunanidhi says
பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடாதது ஏன்? கருணாநிதி கேள்வி


இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பட்டினப்பாக்கத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால், சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சில நாட்கள் முன்பாக, டாஸ்மாக் கடையில் மது அருந்திய இளைஞர்கள் சிலர், பட்டினப்பாக்கம் குடியிருப்பை சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் இருந்து செயின் பறித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த ஆசிரியை நிலைதடுமாறி, சாலையோர தடுப்பில் மோதி உயிரிழந்தார். இதையடுத்து, பட்டினப்பாக்கம் பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர்.

அந்த கடையை மூடாமல், போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை இடமாற்றுவது பற்றி பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசின் இயலாமைக்கான உண்மை காரணம் என்னவென்று தெரியாமல் மர்மமாக உள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், டாஸ்மாக் கடைகள் காரணமாக, குற்றச்செயல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால், மதுவிலக்கை அமல்படுத்துவேன் எனக் கூறிவந்த அதிமுக அரசு, தற்போது அமைதியாக உள்ளது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி