ஆப்நகரம்

தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் கறி கடைகளை மூட உத்தரவு..!

பொதுமக்கள் கூடுவதை தடுக்க அனைத்து சனி கிழைமைகளிலும் இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 26 Apr 2021, 9:12 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலையாக தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு இரவு ஊரடங்குடன் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்று (ஏப்ரல் 26) முதல் அமலுக்கு வருகிறது.
Samayam Tamil கறி கடைகள்


இதனிடையே நேற்று (ஞாயிற்று கிழமை) இரவு 10 மணி முதல் ஏப். 26-ம் தேதி (இன்று) அதிகாலை 4 மணி வரை தமிழக அரசு எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியது.

குறிப்பாக ஞாயிற்று கிழைமைகளில் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் டாஸ்மார்க் மதுபானக் கூடங்கள் மூடல்...! வெளியானது அதிரடி உத்தரவு

அதன்படி, இறைச்சி கடைகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தது. இந்த நிலையில், வரும் நாட்களில் சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இறைச்சி கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அடுத்த செய்தி