ஆப்நகரம்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்- எந்த தேதியில் இருந்து தெரியுமா?

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Jul 2020, 12:22 pm
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத சூழல் நிலவுகிறது. இதனால் சில மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்த தொடங்கிவிட்டன.
Samayam Tamil Ministet Sengottaiyan


தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் ஏதும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் ஏன் இவ்வளோ கொரோனா? மத்திய அரசு விசாரணை!

இதற்கிடையில் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

அதாவது அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு கிராமப்புற மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான குடும்பங்களில் ஸ்மார்ட்போன் வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளை எப்படி கவனிக்க முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா உருவாக்கிய வேலைவாய்ப்பு: ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

இதற்கு அரசு தரப்பில் ஏதேனும் வசதி செய்து தரப்படுமா? ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் எடுப்பது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி