ஆப்நகரம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இதோ அடுத்தகட்ட தளர்வு!

அடுத்த கட்டமாக அரசு அலுவலகங்களில் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 9:29 am
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்களும் இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கமான அலுவலக நேரத்தையே பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
Samayam Tamil tn lockdown relaxation


இந்நிலையில் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்கிறது. வரும் ஜனவரி 1, 2021 முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இவ்வாறு அரசு அலுவலகங்கள் பழைய நிலைக்கு திரும்பினாலும், தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதா என்றால் கேள்விக்குறி தான்.

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொரோனா பாதிப்பு பதிவாகிக் கொண்டிருக்கிறது. இதில் பலி எண்ணிக்கையும் அடங்கும். எனவே முகக்கவசம் அணிதல், போதிய சரீர இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை மறக்காமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது முதல் அலையை விட மிகவும் தீவிரமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி