ஆப்நகரம்

கஜா புயலால் வீழ்ந்த மரங்களை வெட்டித் தூக்க நிதி ஒதுக்கிய தமிழக அரசு; எவ்வளவு தெரியுமா!

சென்னை: வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

TIMESOFINDIA.COM 6 Dec 2018, 3:52 pm
கடந்த மாதம் தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கில் மரங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை வெட்டி, அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil Gaja Cyclone


இந்நிலையில் விவசாயப் பொறியியல் துறை சார்பில் பல்வேறு உபகரணங்கள் வாங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் விவசாயத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், 500 கனரக செயின்சா, உட் சிப்பர் மெஷின்ஸ், விஞ்ச் மெஷின்ஸ், உட் ஸ்பிலிட்டர் மெஷின்ஸ், ஷெரெட்டர் கம் புல்வெரிசர்ஸ்(ஒவ்வொன்றும் தலா 20) வாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானோர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த மரங்கள் வேறோடு புயல் காற்றால் சாய்ந்து, உடைந்தும் காணப்படுகின்றன. மிகுந்த எடை கொண்ட மரங்களை அகற்ற விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இவற்றை அகற்றாவிடில், தங்களது விவசாயப் பணிகளை விவசாயிகளால் மேற்கொள்ள இயலாது.

இதற்கான வேலை ஆட்கள், செலவு உள்ளிட்டவற்றை ஏற்க இயலாத நிலையில் இருக்கின்றனர். இந்த சூழலில் ரூ.7.6 கோடி நிதியை உபகரணங்கள் வாங்க தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அடுத்த செய்தி