ஆப்நகரம்

பேரிடர் ஆலோசனைக்குழு ஏற்படுத்த 2 மாதம் அவகாசம் கோரும் தமிழக அரசு

தமிழகத்தில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைக்குழு ஒன்றை ஏற்படுத்த 2 மாதங்கள் அவகாசம் தேவை என, மாநில அரசு தெரிவித்துள்ளது.

TNN 28 Sep 2016, 11:25 pm
 தமிழகத்தில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைக்குழு ஒன்றை ஏற்படுத்த 2 மாதங்கள் அவகாசம் தேவை என, மாநில அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamil nadu govt seeks two more months to form advisory panel
பேரிடர் ஆலோசனைக்குழு ஏற்படுத்த 2 மாதம் அவகாசம் கோரும் தமிழக அரசு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி, கனமழை மற்றும் வெள்ளம் போன்றவற்றை சமாளிக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த 15 நாட்களுக்குள் பேரிடர் மேலாண்மை தொடர்பாக, ஆலோசனைக் குழு ஒன்றை ஏற்படுத்தும்படி தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்குப் பதில் அளித்துள்ள தமிழக அரசு, இன்னும் 2 மாதங்கள் கால அவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை தொடர்பாக, ஆலோசனைக் குழு ஏற்படுத்துவது கட்டாயமான ஒன்று என்பதால், இதுதொடர்பாக, பல தரப்பிலும் விவாதித்து, நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றே செயல்பட உள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tamil Nadu govt seeks two more months to form advisory panel:

The Tamil Nadu government on Wednesday sought two more months to comply with the directions of the Madras high court to constitute an advisory committee as per the Disaster Management Act.

அடுத்த செய்தி