ஆப்நகரம்

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

TIMESOFINDIA.COM 21 Jan 2019, 11:20 pm
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil Strike


இதற்கு அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய நிலுவைத் தொகை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திகின்றனர். இந்நிலையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் சம்பளத்தை பிடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், விடுப்பு கிடையாது.

வேலைநிறுத்தப் போராட்டம் முடியும் வரை தினசரி வருகைப்பதிவு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி