ஆப்நகரம்

மறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்!

போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Jan 2020, 12:15 pm
மலத் துகள்களினால் மாசடைந்த நீர், உணவு போன்றவற்றை உட்கொள்ளப்படும் போது இளம்பிள்ளை வாதம் தொற்றுகிறது. இதனை போலியோ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றோம்.
Samayam Tamil Polio


இந்நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் 90% பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் போலியோவை தடுக்கும் நோக்கில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

வில்சன் கொலையில் பகீர்; மூளையாக செயல்பட்டது இவரா?

அதாவது குழந்தைகளுக்கு வாய் வழியாக சொட்டு மருந்து போடப்படுகிறது. 1994 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி, மாா்ச் ஆகிய மாதங்களில் இரண்டு தவணையாக ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி போலியோ இல்லாத நாடு என்று அறிவிக்கும் நிலையை இந்தியா எட்டியது. தற்போதைய சூழலில் போலியோ பாதிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு முதல் ஒரு தவணையாக மட்டும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை(19-01-2020) தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்!!

இதையொட்டி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

முன்னதாக ஆண்டிற்கு இருமுறை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும். ஆனால் இம்முறை ஒரேமுறை மட்டும் முகாம் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக வழக்கமான 40 ஆயிரம் முகாம்கள் அல்லாமல் 50 ஆயிரம் முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

"துக்ளக்" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்!!

இந்தப் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

அடுத்த செய்தி