ஆப்நகரம்

தமிழ்நாட்டில் கொரோனாவால் இன்று 9 பேர் பலி..!

சென்னையில் இன்று அதிகபட்சமாக மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

Samayam Tamil 26 May 2020, 6:49 pm
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மேலும் 646 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 592 பேர் எனவும் மற்றவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை இன்றோடு 17 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil vijayabaskar


பலி எண்ணிக்கை:

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 9 பேர் கொரோனவால் பலியாகியுள்ளனர். ஆகையால் மொத்த பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

டிஸ்சார்ஜ் :

அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 9342 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் :

டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழப்புகளை தவிர்த்து இன்றைய நாளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டதில் 8256 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தினமும் சென்னையில் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இன்றும் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 11130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி