ஆப்நகரம்

தமிழ் நூலாசிரியர்களுக்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நிதியுதவி: விண்ணப்பிக்க கடைசி நாள் டிச.28

தமிழ் நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Samayam Tamil 16 Nov 2018, 10:55 pm
தமிழ் நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Samayam Tamil Tamilnadu-eyal-isai-nataka-mandram-750x506


தமிழில் கருத்தாழமிக்க அரிய கலை நூல்களைப் பதிப்பிக்க நூலசிரியர்களுக்கு, நூல் ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10.00 இலட்சம் நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் திட்டம். மற்றும் 2. தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய தலா ரூ.75,000/- வீதம் இரண்டு நாட்டிய நாடகங்களுக்கு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் திட்டம்

தமிழகத்தில் கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், கருத்தாழமிக்க அரிய தமிடிந நூல்களை பதிப்பிக்க, நூல் ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10.00 இலட்சம் வழங்கிடும் திட்டத்தை தமிழ்நநாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிறைவேற்றிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நநாடு அரசின் சார்பில் தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் கலை நிறுவனங்களுக்கு நல்கையாக தலா ரூ75,000/-வீதம் இரண்டு புதிய நாட்டிய நாடகங்களுக்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

மேலே கூறியுள்ள திட்டங்களின் கீழ், பங்கு பெற விரும்பும் நூலாசிரியர்கள் மற்றும் கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நூலாசிரியர்கள், கலைக்குழுக்கள் / கலை நிறுவனங்கள் 28-12-2018 தேதி மாலை 05.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், இதற்குண்டான விண்ணப்பப் படிவம் பெறவும் மற்றும் நிபந்தனைகள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்:-

உறுப்பினர்-செயலாளர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-600 028.
தொலைபேசி: 044-2493 7471.
மின்னஞ்சல்- tneinm@gmail.com

அடுத்த செய்தி