தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் உடனடியாக ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக சில விளக்கங்கள் ஆளுநர் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே கடிதம் மூலம் உரிய விளக்கங்களை தமிழக அரசு அளித்திருந்தது. 6 வாரங்களில் ஒப்புதல்
இருப்பினும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இப்படியே காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கால வரம்பு முடிவுக்கு வந்தது. இதனால் அவசர சட்டம் காலாவதியானது. அதாவது, சட்டமன்றம் கூடியதில் இருந்து 6 வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஆன்லைன் ரம்மி ஒரு நோய்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விவரங்களையும், அவர் கேட்ட பதில்களையும் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்டவை ஒரு நோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூட எச்சரித்துள்ளது. இவற்றை ஒழிக்க வேண்டியது நம்முடைய கடமை. ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது.
ஆளுநரை கேள்வி கேட்க முடியாது
அவர் தான் எங்களை கேள்வி கேட்க முடியும். ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்ததற்கான காரணம் ஆளுநருக்கு தான் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தலைதூக்க ஆரம்பித்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டினர். அடுத்து ஏதேனும் விபரீதம் நிகழ்வதற்குள் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு
இந்நிலையில் இன்று (டிசம்பர் 1) காலை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், ஏற்பட்ட உயிரிழப்புகள், சட்டத்தின் தேவைகள் உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைப்பார் எனக் கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த வாரம் கூட ஆளுநரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இருப்பினும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இப்படியே காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கால வரம்பு முடிவுக்கு வந்தது. இதனால் அவசர சட்டம் காலாவதியானது. அதாவது, சட்டமன்றம் கூடியதில் இருந்து 6 வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஆன்லைன் ரம்மி ஒரு நோய்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விவரங்களையும், அவர் கேட்ட பதில்களையும் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்டவை ஒரு நோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூட எச்சரித்துள்ளது. இவற்றை ஒழிக்க வேண்டியது நம்முடைய கடமை. ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது.
ஆளுநரை கேள்வி கேட்க முடியாது
அவர் தான் எங்களை கேள்வி கேட்க முடியும். ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்ததற்கான காரணம் ஆளுநருக்கு தான் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தலைதூக்க ஆரம்பித்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டினர். அடுத்து ஏதேனும் விபரீதம் நிகழ்வதற்குள் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு
இந்நிலையில் இன்று (டிசம்பர் 1) காலை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், ஏற்பட்ட உயிரிழப்புகள், சட்டத்தின் தேவைகள் உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைப்பார் எனக் கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த வாரம் கூட ஆளுநரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.