ஆப்நகரம்

தமிழக தலைவர்கள் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.

TOI Contributor 4 Dec 2016, 10:25 pm
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.
Samayam Tamil tamil nadu leaders cancelled their programmes
தமிழக தலைவர்கள் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று, ரத்தத்தில் தொற்று என்று பலவாறு கூறப்பட்டது. தொடர்ந்து அவருக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சார்டு ஜான் பீலே மற்றும் சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி அளித்து இருந்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டியும் முதல்வர் நன்றாக இருக்கிறார். அவர் விரும்பும்போது வீட்டுக்கு செல்லலாம். சில நிமிடங்கள் பேசுகிறார். அவருக்கு ட்ரைகியோஸ்டோமி பொருத்தப்பட்டுள்ளது. சில நிமிடங்கள் அவர் செயற்கை சுவாசப் பிரிவில் உள்ளார்'' என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை கூட, ஜெயலலிதா நலமாக இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான பொன்னையன் நலமாக இருக்கிறார் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று மாலை முதல்வருக்கு மீண்டும் மாரடைப்பு என்றும் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி