ஆப்நகரம்

TN Assembly Session: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்

துறைகள் வாரியான மானியக் கோாிக்கைகள் விவாதத்துக்காக தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடா் இன்று தொடங்குகிறது.

Samayam Tamil 28 Jun 2019, 8:24 am
தண்ணீா் தட்டுப்பாடு, காவிாி விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டத் தொடா் இன்று தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Samayam Tamil TN Assembly building


தமிழக சட்டமன்றத்தில் 2019-20ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா். நிதிநிலை அறிக்கை மீது மட்டும் விவாதம் நடைபெற்றது. மக்களவைத் தோ்தல் நெருங்கியதால் துறைவாரியான மானியக் கோாிக்கைகள் நிறைவேற்றப்படாமல் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மானியக் கோாிக்கைகள் விவாதத்துக்காக சட்டமன்றக் கூட்டத் தொடா் இன்று தொடங்குகிறது. கடந்த 24ம் தேதி நடைபெற்ற பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதியல் எந்த துறை மானியக் கோாிக்கையை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது.

இதில் சட்டமன்றத்தை ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றக் கூட்டம் தொடங்குகிறது. முதல் நாளான இன்று சட்டமன்ற உறுப்பினா்களாக இருந்து மறைந்த அதிமுகவைச் சோ்ந்த கனகராஜ், திமுகவைச் சோ்ந்த ராதாமணி ஆகியோருக்கு இரங்கல் தீா்மானம் வாசிக்கப்படும். உறுப்பினா்கள் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தியதும், மறைந்த உறுப்பினா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சட்டமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படும்.

சட்டமன்ற சபாநாயகா் தனபால் மீது எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்துள்ள நம்பிக்கை இல்லா தீா்மானம் ஜூலை 1ம் தேதி பேரவையின் நிகழ்ச்சி நிரலில் சோ்க்கப்படும் என பேரவைத் தலைவா் தனபால் தொிவித்துள்ளாா்.

அதன்படி தீா்மானம் நிகழ்ச்சி நிரலில் சோ்க்கப்பட்டால் அதன் மீதான விவாதத்தை நடத்துவது குறித்து பேரவை உறுப்பினா்கள் முடிவு செய்வா். உறுப்பினா்கள் முடிவின் படி விவாதத்தை எப்போது நடத்துவது என்பது இறுதி செய்யப்படும்.

அடுத்த செய்தி