ஆப்நகரம்

அசராத குடிமகன்கள்: விற்பனையில் உச்சம் தொட்ட டாஸ்மாக் விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு கடந்த இரு நாள்களில் மதுபான விற்பனை விவரம் வெளிவந்துள்ளது.

Samayam Tamil 15 Nov 2020, 12:21 pm
பண்டிகை காலம் என்றால் புத்தாடை விற்பனை, போக்குவரத்து டிக்கெட் விற்பனை ஆகியவற்றை கணக்கிடுவதைப் போல தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகும்.
Samayam Tamil TN Liquor sale


ஒவ்வொரு பண்டிகையைவிடவும் அடுத்த பண்டிகையில் விற்பனை அதிகரித்தபடியேதான் வருகிறது. இந்நிலையில் நேற்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா நெருக்கடி காரணமாக பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது எனக் கூறப்படும் நிலையில் முந்தைய ஆண்டுகளை விட அதிகளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி போடும் மாஸ்டர் பிளான்!

தமிழகம் முழுவதும் 465.79 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி 227.88 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களும், தீபாவளியான நேற்று 237.91 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 103.82 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனையாகின. திருச்சி மண்டலத்தில் 95.47 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 94.36 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.

சசிகலா ரிலீஸ் எப்போது? எதிர்பார்க்கும் எடப்பாடி - காரணம் இதுதான்!

ஞாயிற்றுக் கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் மது விற்பனை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளியில் டாஸ்மாக் மதுபான கடைகளில் 2 நாட்களில் ரூ. 455 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. 2018ஆம் ஆண்டில் ரூ.328 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி