ஆப்நகரம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்: ரத்தாகுமா?

தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட ‘லோக் ஆயுக்தா சட்டம் 2018’-ஐ ரத்து செய்யக்கோரி கரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

Samayam Tamil 14 Jan 2020, 4:17 pm
இந்த வழக்கு இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முதலில் மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் வாதங்களை முன்வைத்தார்.
Samayam Tamil தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்


அதில், “லோக் பால் சட்டத்தில் 5 பேர் கொண்ட குழு தலைவரையும் உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கிறது. அந்த குழுவில் தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், சபாநாயகர், சட்ட நிபுணர் இடம்பெறுவர்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா 2018 சட்டத்தில், அந்த உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் குழுவில், முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர், சபாநாயகர் மட்டுமே உள்ளனர். எந்த நியூட்ரல் நபர்களும் இல்லை. இதனால் முதல்வர் விரும்பும் எந்த நபரையும் அந்த அமைப்பின் தலைவராக கொண்டு வர முடியும்” என வாதிட்டார்.

'ஜனவரி 22'அன்று என் மகளின் ஆன்மா சாந்தி அடையும்..! நிர்பயா தாய் கண்ணீர்...

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “பிற மாநிலங்களில் எவ்வாறு லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும், லோக் ஆயுக்தா சட்டம் இயற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளனவா என்பது தொடர்பாகவும், மனுதாரர் மற்றும் தமிழ்நாடு அரசை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மகர விளக்கு பூஜைக்கு தயாராகும் சபரிமலை!

பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

முறிகிறதா திமுக, காங்கிரஸ் கூட்டணி?- அழகிரிக்கு ’ஷாக்’ கொடுத்த டி.ஆர்.பாலு!

அடுத்த செய்தி