ஆப்நகரம்

அனைவரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்: நடராஜ் !

அனைவரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் என நடராஜ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

TOI Contributor 18 Apr 2017, 10:15 pm
சென்னை: அனைவரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் என நடராஜ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
Samayam Tamil tamil nadu minister hold discussion meeting at chief minister edapadi palanisamy house
அனைவரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்: நடராஜ் !


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார், கட்சியும் ஆட்சியும் ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. எனவே தினகரன் மற்றும் சசிகலா சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைப்பதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து நடராஜ் எம்.எல்.ஏ., கூறுகையில்,’ இந்த கூட்டத்தில் தொண்டர்களின் விருப்பப்படி ஆட்சியை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தான் அமைச்சரும் தெரிவித்தார். அதனால், அனைவரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்.’ என்றார்.

அடுத்த செய்தி