ஆப்நகரம்

தருமபுரம் ஆதீனம்: முதல்வர் நல்ல முடிவெடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை!

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச விவகாரம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2022, 10:30 am
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுர ஆதீனமானது, பழமையானது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது ஆதீனத்தின் 27ஆவது குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர்த்தி வீதியுலா கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இந்தமுறை பல்லக்கில் தூக்கும் நிகழ்வுக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
Samayam Tamil mk stalin pk sekar babu


இதற்கு பாஜக ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மனிதனை மனிதன் சுமப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோட்டாட்சியரின் உத்தரவுக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு, “முதலமைச்சரின் உத்தரவு படி இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு 112 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தோம். ஆனால், அதற்கும் கூடுதலாக பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
எடப்பாடி கட்டும் மனக்கோட்டை: செங்கலை உருவும் சசிகலா
வரும் மே 22ஆம் தேதி தான் தருமபுரம் ஆதீனம் பட்டினிப் பிரவேசம் நடைபெறுகிறது. தருமபுரம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குறித்து அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார். தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எடுக்கப்படும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்.

தமிழகத்தில் அமைதியான சூழல், அனைவரும் விரும்பும் வகையில் செயல்படும் அரசு திமுக. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்மிகம், இறை வழிபாட்டிற்கு எதிராக கருத்து கூறவில்லை” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி