ஆப்நகரம்

சென்னையில் நடத்துனா் இல்லாத சிற்றுந்துகளை இயக்க முடிவு

வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக சென்னையில் நடத்துனா்கள் இல்லாமல் சிற்றுந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Jul 2018, 6:56 pm
வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக சென்னையில் நடத்துனா்கள் இல்லாமல் சிற்றுந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Small Bus


கடந்த 2013ம் ஆண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டின் கீழ் 200 சிற்றுந்துகள் (Small Bus) குறுகிய சாலை, தெருக்கள் வழியாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள், பொதுமக்கள் எளிதில் போக்குவரத்து வசதியை பெற்று பயன் அடைந்தனா்.

இந்த நிலையில் சிற்றுந்துகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் மட்டுமே வருவாய் வருவதாக கூறப்படுகிறது. பராமரிப்பு செலவு, டீசல் செலவு, பணியாளா் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளால் சிற்றுந்துகள் தற்போது நட்டத்தில் இயங்கி வருகிறது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாாிகள் சிற்றுந்துகளால் ஏற்படும் நட்டம் குறித்து ஆய்வு செய்தனா். நடத்துநா்கள் இல்லாமல் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து நடத்துநா்கள் இன்றி சிற்றுந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளைப் போன்று தானியங்கி எந்திரம் மூலம் பயணச் சீட்டு வழங்கும் வசதியை பயன்படுத்தி சிற்றுந்துகளை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிா்வாகிகள் இது குறித்து கூறுகையில், நடத்துநா்கள் இல்லாமல் சிற்றுந்துகளை இயக்குவது நடைமுறைக்கு ஒத்து வராது. மோட்டாா் வாகன சட்டப்படி நடத்துநா்கள் இல்லாமல் சிற்றுந்துகளை இயக்கக் கூடாது. மேலும் இதனால் ஓட்டுநா்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உள்ளாக்கப்படுவாா்கள் என்று தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி