ஆப்நகரம்

நிவாரண பொருட்கள் வழங்க ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் அனுமதி: முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

உணவு, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மூலம் மட்டும் விநோயகம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Samayam Tamil 13 Apr 2020, 2:10 pm
சென்னை: கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகத்தையே தற்போது கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி குழந்தைகள் உள்ளன. இந்தியா உலக அளவில், அதிக குழந்தைகள் கொண்ட நாடாகும். இதில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர்.

வீடற்ற அந்த குழந்தைகள் விவசாயம் சார்ந்த வேலைகள் சாலைகளில் பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆவர். டெல்லியில் மட்டும் 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தெருக்களில் வசிப்பதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரை சாலையோராம் வசிப்பவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் என பல லட்சகணக்கனோர் உணவின்றி நாள்தோறும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தவித்து வருகின்றனர்.

நிவாரணம் வழங்க தடை இல்லை, கட்டுப்பாடு மட்டுமே!

இப்படி தவித்து வரும் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினரும் உணவுகளை தானமாக தமிழகம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அளித்து வருகின்றனர். இதன் மூலம் இந்த குடும்பங்கள் தங்களது வயிற்றுப் பசியாற்றி வரும் நிலையில், தானமாக உணவு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு திடீரென என நேற்று தடை விதித்துள்ளது.

மேலும் உணவு மற்றும் அத்தியவாசிய பொருட்களை சம்மந்தப்பட்ட மாநகராட்சியிடம் வழங்கினால், அரசே அதனை விநியோகம் செய்யும் என அறிவித்துள்ளது. ஆனால் feedmychennai.org எனும் அமைப்பை ஆர்எஸ்எஸ் நிர்வாகி இணைந்து தற்போது உருவாக்கியுள்ளனர். இந்த feedmychennai.org அமைப்பு தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 15 மண்டலங்களில் உணவு வழங்குவது, மளிகை பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

பல்வேறு தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சியினர் அரசுக்கு வழங்கும் உணவு, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மூலம் விநோயகம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வருகிறது. அப்படி அரசு அனுமதிக்கும்பட்சத்தில் இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. தற்போது இக்கட்டான சூழலிலும் எந்த கட்சியும், தன்னர்வ தொண்டு நிறுவனங்களும் சுய விளம்பரமின்றி சத்தமில்லாமல் தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.

திருப்பூரில் முஸ்லிம் என்பதால் புறக்கணிப்பா? வட்டாட்சியர் நடவடிக்கை!!

இவர்களிடம் பொருட்களை வாங்கி கொண்டு அதிலும் சுயவிளம்பரம் தேட நினைக்கும் அரசின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. தொண்டு நிறுவனம் எனும் முககவசம் அணிந்து கொண்டு தனது அதிகாரத்தின் மூலம் அரசை பணியவைத்து, அதன் மூலம் சுயவிளம்பரம் தேட நினைக்கும் ஆர்எஸ்எஸ் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.

இந்த தடை உத்தரவால் தானமாக உணவு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துவதோடு, இனி இவர்களுக்கு உணவு கிடைப்பதை அரசு எப்படி உறுதி செய்யப் போகிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மக்களின் பசியாற்ற தானமாக உணவு அளித்து வருபவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஆகவே உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வரும் காலங்களிலும் தானமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென்றும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி