ஆப்நகரம்

கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் எதிரொலித்த ஜெயலலிதாவுக்கான ஒப்பாரி!

மறைந்த ஜெயலலிதாவை நினைத்து தமிழகம் எங்கும் உள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

TNN 6 Dec 2016, 5:54 pm
மறைந்த ஜெயலலிதாவை நினைத்து தமிழகம் எங்கும் உள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Samayam Tamil tamil nadu peoples pays last respects to jayalalithaa
கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் எதிரொலித்த ஜெயலலிதாவுக்கான ஒப்பாரி!




சென்னையில் ஜெயலலிதாவின் உடலை இறுதியாக ஒருமுறையேனும் காணமுடியாதா என்ற நோக்கத்தில் பல மாவட்டங்களை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.



சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் உள்ள மக்கள் ஆங்காங்கே ஜெயலலிதாவின் படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலில் செலுத்தி வருகின்றனர்.



மதுரை பாலமேட்டிலிருந்து, நத்தம் செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் உள்ள கிராமங்களில், ஆங்காங்கே பந்தல் போட்டு, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி மற்றும் ஒப்பாரியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு பெண்கள், சிறுமிகள் உடபட பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர்.



சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோகம் சூழ்ந்துகொண்டிருக்கின்றது.

அடுத்த செய்தி