ஆப்நகரம்

மெரினா களத்தில் ஹீரோவான தமிழக காவல்துறைகாரர்!!

​ '' டெல்லி சென்று இருக்கும் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு உத்தரவுடன் வர வேண்டும். தமிழனாக இங்கு நான் பேசுகிறேன். காவல்துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது'' என்று காவல்துறைகாரர் ஒருவர் மெரினாவில் பேசியது தற்போது அவரை கதாநாயகனாக மாற்றியுள்ளது.

TOI Contributor 20 Jan 2017, 9:46 am
'' டெல்லி சென்று இருக்கும் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு உத்தரவுடன் வர வேண்டும். தமிழனாக இங்கு நான் பேசுகிறேன். காவல்துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது'' என்று காவல்துறைகாரர் ஒருவர் மெரினாவில் பேசியது தற்போது அவரை கதாநாயகனாக மாற்றியுள்ளது.
Samayam Tamil tamil nadu police man has supported jallikattu protest in the police dress
மெரினா களத்தில் ஹீரோவான தமிழக காவல்துறைகாரர்!!


மெரினாவில் இன்று நான்காவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. மெரினாவில் கடலா? இல்லை மனித அலைகளா? என்று வியக்கும் அளவிற்கு இளைஞர்களின் ஆக்கிரமிப்பு வியக்க வைக்கிறது.

இன்று திடீரென மெரினாவில் பாதுகாப்பிறகு காவல்துறை உடையில் இருந்த காவல்துறைகாரர் ஒருவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உரையாற்றினார். இவர் திடீரென மைக் பிடித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, விவசாயத்துக்கு ஆதரவாக பேசினார். மேலும், ''இது ஒரு துவக்கம்தான். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல்துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது. இங்கு சீருடை இல்லாமல் நிறைய காவல்துறைகாரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார். காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா? விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். தமிழனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். உயரதிகாரிகள் கொடுத்த பிரஷ்ஷாரால் தற்போது இந்த காவல்துறைகாரர்கள் என்னை கூப்பிடுகின்றனர். என் சொந்த ஊர் மதுரை. ராமனாதபுரம்தான் என்னுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு பஞ்சம் பிழைக்க செல்வது. நாங்கள் அமெரிக்காவா செல்ல முடியும். எங்களால் பேச முடியாமல் இருக்கிறோம். ஜல்லிக்கட்டு வெற்றி பெறும். இனி அடுத்தது மண் கொள்ளையை நாம் தடுக்க வேண்டும் '' என்று உணர்வுபூர்வமாக பேசியது அங்கு இருந்த இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.


Tamil Nadu police man has supported Jallikattu protest in the police dress

அடுத்த செய்தி