ஆப்நகரம்

லிஸ்ட் போட்டு போராடும் காவல்துறைக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க!

விடுமுறையே இல்லாமல் வேலை பார்க்கும் காவல்துறையினருக்கு கொஞ்சம் கருணை காட்ட வேண்டும் என்று போலீசார் தரப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

TNN 24 Jun 2017, 2:08 am
சென்னை: விடுமுறையே இல்லாமல் வேலை பார்க்கும் காவல்துறையினருக்கு கொஞ்சம் கருணை காட்ட வேண்டும் என்று போலீசார் தரப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
Samayam Tamil tamil nadu police to stage protest seeking welfare measures
லிஸ்ட் போட்டு போராடும் காவல்துறைக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க!


ஒய்வின்றி நாள் முழுதும் உழைப்பு, பண்டிகை நாட்களில் கூட வேலை பார்ப்பது, வேலைப்பழுவுக்கு இணையான ஊதியமின்மை, மன அழுத்தம் என பல கஷ்டங்களைச் சந்திக்கும் போலீசார் தங்களுக்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

இவை தொடர்பாக, வரும் ஜூலை 6ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குடும்பத்தினருடன் சந்தித்து மனு கொடுக்க இருக்கின்றனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.



ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, வார விடுமுறை, மனநலப் பயிற்சி, காவலர் நலச்சங்கம் அமைத்தல், மேல் அதிகாரிகளின் குடும்பத்திற்கு சேவை செய்யும் அடிமை முறைக்கு முடிவு கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன.

மேலும், இந்த போஸ்டரை வாட்ஸ்-ஆப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பகிர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினரை ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி