தமிழகத்தின் தங்கத் தாரையாக இருந்து அதிமுக தொண்டர்களை மட்டுமின்றி பலருக்கும் தனது வாழ்க்கையின் மூலம் பல பாடங்களை விட்டுச் சென்றவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் பள்ளி மாணவியாக இருந்தபோது படிப்பிலும் படு சுட்டி, சினிமாவில் நாயகியாக இருந்தபோதும் முதல் இடம்தான். அரசியலுக்குள் புயலாக நுழைந்து அங்கும் பல சாதனைகளை நிகழத்தினார். அரசியல் சாணக்கியர்களை அசாத்தியமாக தோற்கச் செய்தார்.
மக்களிடையே இருந்த செல்வாக்கு அதிகரிக்க, அதிகரிக்க அவர் நம்மை விட்டுச் சென்றார். அவரது மரணமும் அதிர்ச்சியாகவே முடிந்துவிட்டது.
எம்.ஜிஆரின் மரணத்திற்குப் பின்னர் தன்னை எப்படியெல்லாம் அவமதித்தார்களோ அதையெல்லாம் தூக்கி எறிந்து அதிமுகவுக்கு அரணாக இருந்து அதைக் காப்பாற்றினார். அடுத்தது யார் என்ற கேள்வியுடன் விட்டுச் சென்றார்.
அவரது மரணத்திற்குப் பின்னர் அவருடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் நெருக்கமாக இருந்து, ஜெயலலிதாவின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவர் அவரது நெருங்கிய தோழி சசிகலாதான். ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்தபோதும், ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்து இருந்தார. அரசு அதிகாரிகள் பலரும் சசிகலாவுக்கு நெருங்கியவர்கள்தான். தற்போதும், அவர்தான் அதிகாரவர்க்கமாக திகழ்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
முதல்வர் கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்ற செய்தி வெளியாவதற்கு முன்பே, கட்சியை அபகரிப்பதில் சசிகலா குடும்பத்தினர் அக்கறை காட்டினர் என்ற செய்தி தற்போது வெளியாகி வருகிறது. ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை மாரடைப்பு என்ற செய்தி பரவியது. மறுநாள் காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது என்று செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் மதியம் 2 மணிக்கெல்லாம் அவர் மரணமடைந்தார் என்ற செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு, கட்சிக்கு அடுத்தது யார் என்ற போட்டி சசிகலா குடும்பத்திற்குள் நிலவியுள்ளது. கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு மூன்று வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் மாலை 6 மணிக்கு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் அதே அப்பல்லோ மருத்துவமனையில் கூடியது. அப்போது, மூத்த அமைச்சர்கள் 5 பேர் வரவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. எம்.எல்.ஏ.,க்களும் அவர்களில் ஒருவரைத்தான் முதல்வராக்க சின்னம்மா தேர்வு செய்யவுள்ளார் என்று தங்களுக்குள் சமாதானமானார்கள். அந்த நேரத்தில் அந்த 5 முக்கிய அமைச்சர்கள் எங்கே சென்றனர். அவர்களிடம் பேச்சு நடத்தியது யார்? என்பது தற்போதும் மர்மமாக உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அம்மாவின் மரணத்தை அறிந்தே உள்ளனர். அதனால், சிறை வைக்கப்பட்டனர்.
காலை முதல் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சசிகலாவால் மருத்துவமனையிலேயே சிறை பிடிக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு மீண்டும் எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. அப்போது முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட 5 அமைச்சர்கள் வரவில்லை. அந்தக் கூட்டமும் பின்னர் ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் அங்கேயே அடைந்து வைக்கப்பட்டனர். தமிழக ஊடகங்கள் மாலை 5 மணிக்கு மேல் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை வெளியிட்டது. ஆனால், இதை கடுமையாக மருத்துவமனை மறுத்தது.
பின்னர், இரவு 11 மணிக்கு பன்னீர் செல்வம் உள்பட 5 அமைச்சர்கள் கட்சி தலைமையகத்து வந்தனர். கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முதல்வராக பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று ஒற்றை வரியில் வாசித்து முடித்தார். அப்படியே அங்கிருந்து அனைத்து அமைச்சர்களும் பஸ்ஸில் அடைக்கப்பட்டு, ராஜ்பவனுக்கு அழைத்து செல்லபட்டனர். அவரசமாக பதவியேற்றனர். மாநிலத்தின் முதல்வர் இறக்கும்பட்சத்தில் அடுத்த முதல்வரை தேர்வு செய்து, அவர் பதவியேற்ற பின்னர்தான், மரணத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஒரு மரபு உள்ளது.
இதற்குப் பின்னரே ஜெயலலிதா இறந்த செய்தியை மருத்துவமனை அறிவித்தது. கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவே, எம்.எல்.ஏ..,க்களிடம் சசிகலா கையெழுத்து பெற்றார் என்று கூறப்பட்டது.
தற்போது கட்சி சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஆனால், கட்சியின் பலம் பொருந்திய பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருப்பது யார் என்ற கேள்விக்கு இன்னும் சில நாட்களில் பதில் கிடைத்துவிடும். சசிகலாதான் ஏற்பார் என்று ஊகித்தாலும், அவரை அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது. ஜெயலலிதாவைத்தான் அதிமுக தொண்டர்கள் உயிருக்கு உயிராக நேசித்தனர். அதுபோன்ற ஒரு பிடிப்பு, இறுக்கமும் சசிகலா விஷயத்தில் கட்சித் தொண்டர்களிடம் இல்லை.
முதல்வர் பன்னீர் செல்வமும் சசிகலாவின் பல நெளிவு, சுழிவுகளுக்கு ஏற்ப ஆட்சியை நடத்த வேண்டியது இருக்கும். முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர் செல்வம் அரசியலில் அனுபவம் வாய்ந்தவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதபோது எல்லாம், எதிர்க் கட்சிகளை சாமார்த்தியமாக கையாண்டவர். அவரை மூத்த அமைச்சர்களும் மறைமுகமாக ஆதரித்தே வருகின்றனர். டெல்லியும் இவரைத்தான் விரும்புகிறதாம்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 2011ல், சசிகலா வெளியேற்றப்பட்டு, மீண்டும் போயஸ் இல்லத்திற்குள் சேர்க்கப்பட்டார். அப்போது, ''எனது குடும்பத்தினருடன் எனக்கு எந்த ஓட்டும், உறவும் இல்லை. நான் அக்காவுடன் இருப்பேன்'' என்று எழுதிக் கொடுத்துவிட்டு போயஸ் வீட்டுக்குள் வந்தார். ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டார். தற்போது என்னவானது.
சசிகலாவின் கணவர் நடராஜனை கட்சியில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அவர்தான், ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா வைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்தார். எந்தக் குடும்பத்தினருடன் உறவு இல்லை என்று சசிகலா எழுதிக் கொடுத்தாரோ, அந்த மொத்தக் குடும்பமும், மேடையில் இருந்தது. அம்மாவின் தொண்டன் யாரும் அம்மாவைப் பார்க்க முடியவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டனின் கண்ணீர் அவன் நேசித்த அம்மாவின் மீது விழவில்லை.
மக்களுக்கு மறதி அதிகம். எதையும் எளிதில் மறந்துவிடுவார்கள் என்ற மனப்போக்கு எப்போதும் அரசியல்வாதிகளுக்கு உண்டு. அதுதான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அம்மா அலங்கரித்த அந்த காலியிடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்று. அந்த இடத்தை யார் வேண்டுமானாலும் தற்போது நிரப்பலாம். ஆனால், அந்த திறமை, ஆதிக்கம், சாணக்கியத்தனம், புரட்சிகர மாற்றங்கள் அனைத்தும் என்றுமே காலியிடமாகத்தான் இருக்கும்.
மக்களிடையே இருந்த செல்வாக்கு அதிகரிக்க, அதிகரிக்க அவர் நம்மை விட்டுச் சென்றார். அவரது மரணமும் அதிர்ச்சியாகவே முடிந்துவிட்டது.
எம்.ஜிஆரின் மரணத்திற்குப் பின்னர் தன்னை எப்படியெல்லாம் அவமதித்தார்களோ அதையெல்லாம் தூக்கி எறிந்து அதிமுகவுக்கு அரணாக இருந்து அதைக் காப்பாற்றினார். அடுத்தது யார் என்ற கேள்வியுடன் விட்டுச் சென்றார்.
அவரது மரணத்திற்குப் பின்னர் அவருடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் நெருக்கமாக இருந்து, ஜெயலலிதாவின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவர் அவரது நெருங்கிய தோழி சசிகலாதான். ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்தபோதும், ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்து இருந்தார. அரசு அதிகாரிகள் பலரும் சசிகலாவுக்கு நெருங்கியவர்கள்தான். தற்போதும், அவர்தான் அதிகாரவர்க்கமாக திகழ்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
முதல்வர் கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்ற செய்தி வெளியாவதற்கு முன்பே, கட்சியை அபகரிப்பதில் சசிகலா குடும்பத்தினர் அக்கறை காட்டினர் என்ற செய்தி தற்போது வெளியாகி வருகிறது. ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை மாரடைப்பு என்ற செய்தி பரவியது. மறுநாள் காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது என்று செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் மதியம் 2 மணிக்கெல்லாம் அவர் மரணமடைந்தார் என்ற செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு, கட்சிக்கு அடுத்தது யார் என்ற போட்டி சசிகலா குடும்பத்திற்குள் நிலவியுள்ளது. கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு மூன்று வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் மாலை 6 மணிக்கு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் அதே அப்பல்லோ மருத்துவமனையில் கூடியது. அப்போது, மூத்த அமைச்சர்கள் 5 பேர் வரவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. எம்.எல்.ஏ.,க்களும் அவர்களில் ஒருவரைத்தான் முதல்வராக்க சின்னம்மா தேர்வு செய்யவுள்ளார் என்று தங்களுக்குள் சமாதானமானார்கள். அந்த நேரத்தில் அந்த 5 முக்கிய அமைச்சர்கள் எங்கே சென்றனர். அவர்களிடம் பேச்சு நடத்தியது யார்? என்பது தற்போதும் மர்மமாக உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அம்மாவின் மரணத்தை அறிந்தே உள்ளனர். அதனால், சிறை வைக்கப்பட்டனர்.
காலை முதல் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சசிகலாவால் மருத்துவமனையிலேயே சிறை பிடிக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு மீண்டும் எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. அப்போது முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட 5 அமைச்சர்கள் வரவில்லை. அந்தக் கூட்டமும் பின்னர் ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் அங்கேயே அடைந்து வைக்கப்பட்டனர். தமிழக ஊடகங்கள் மாலை 5 மணிக்கு மேல் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை வெளியிட்டது. ஆனால், இதை கடுமையாக மருத்துவமனை மறுத்தது.
பின்னர், இரவு 11 மணிக்கு பன்னீர் செல்வம் உள்பட 5 அமைச்சர்கள் கட்சி தலைமையகத்து வந்தனர். கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முதல்வராக பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று ஒற்றை வரியில் வாசித்து முடித்தார். அப்படியே அங்கிருந்து அனைத்து அமைச்சர்களும் பஸ்ஸில் அடைக்கப்பட்டு, ராஜ்பவனுக்கு அழைத்து செல்லபட்டனர். அவரசமாக பதவியேற்றனர். மாநிலத்தின் முதல்வர் இறக்கும்பட்சத்தில் அடுத்த முதல்வரை தேர்வு செய்து, அவர் பதவியேற்ற பின்னர்தான், மரணத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஒரு மரபு உள்ளது.
இதற்குப் பின்னரே ஜெயலலிதா இறந்த செய்தியை மருத்துவமனை அறிவித்தது. கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவே, எம்.எல்.ஏ..,க்களிடம் சசிகலா கையெழுத்து பெற்றார் என்று கூறப்பட்டது.
தற்போது கட்சி சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஆனால், கட்சியின் பலம் பொருந்திய பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருப்பது யார் என்ற கேள்விக்கு இன்னும் சில நாட்களில் பதில் கிடைத்துவிடும். சசிகலாதான் ஏற்பார் என்று ஊகித்தாலும், அவரை அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது. ஜெயலலிதாவைத்தான் அதிமுக தொண்டர்கள் உயிருக்கு உயிராக நேசித்தனர். அதுபோன்ற ஒரு பிடிப்பு, இறுக்கமும் சசிகலா விஷயத்தில் கட்சித் தொண்டர்களிடம் இல்லை.
முதல்வர் பன்னீர் செல்வமும் சசிகலாவின் பல நெளிவு, சுழிவுகளுக்கு ஏற்ப ஆட்சியை நடத்த வேண்டியது இருக்கும். முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர் செல்வம் அரசியலில் அனுபவம் வாய்ந்தவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதபோது எல்லாம், எதிர்க் கட்சிகளை சாமார்த்தியமாக கையாண்டவர். அவரை மூத்த அமைச்சர்களும் மறைமுகமாக ஆதரித்தே வருகின்றனர். டெல்லியும் இவரைத்தான் விரும்புகிறதாம்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 2011ல், சசிகலா வெளியேற்றப்பட்டு, மீண்டும் போயஸ் இல்லத்திற்குள் சேர்க்கப்பட்டார். அப்போது, ''எனது குடும்பத்தினருடன் எனக்கு எந்த ஓட்டும், உறவும் இல்லை. நான் அக்காவுடன் இருப்பேன்'' என்று எழுதிக் கொடுத்துவிட்டு போயஸ் வீட்டுக்குள் வந்தார். ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டார். தற்போது என்னவானது.
சசிகலாவின் கணவர் நடராஜனை கட்சியில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அவர்தான், ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா வைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்தார். எந்தக் குடும்பத்தினருடன் உறவு இல்லை என்று சசிகலா எழுதிக் கொடுத்தாரோ, அந்த மொத்தக் குடும்பமும், மேடையில் இருந்தது. அம்மாவின் தொண்டன் யாரும் அம்மாவைப் பார்க்க முடியவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டனின் கண்ணீர் அவன் நேசித்த அம்மாவின் மீது விழவில்லை.
மக்களுக்கு மறதி அதிகம். எதையும் எளிதில் மறந்துவிடுவார்கள் என்ற மனப்போக்கு எப்போதும் அரசியல்வாதிகளுக்கு உண்டு. அதுதான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அம்மா அலங்கரித்த அந்த காலியிடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்று. அந்த இடத்தை யார் வேண்டுமானாலும் தற்போது நிரப்பலாம். ஆனால், அந்த திறமை, ஆதிக்கம், சாணக்கியத்தனம், புரட்சிகர மாற்றங்கள் அனைத்தும் என்றுமே காலியிடமாகத்தான் இருக்கும்.