ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம்: என்ன முடிவெடுக்கிறது பள்ளிக் கல்வித் துறை?

பள்ளிக் கல்வித்துறைச் செயலாளரை தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வழங்கியுள்ளது.

Samayam Tamil 4 Dec 2021, 1:24 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil anbil mahesh poyyamozhi


திமுக தேர்தல் சமயத்தில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் முக்கியமானது புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்பது தான்.

இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து துறை அரசு ஊழியர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
சுய உதவிக்குழு கடன் ரத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இந்நிலையில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு தலைமைச் செயலகத்தில் மேற்கண்ட கூட்டணியின் செயலாளர்கள், பிரதிநிதிகள் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவை சந்தித்து கொடுத்தனர்.

“புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வர வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களை திரும்ப பழைய பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற பள்ளிக் கல்வி அமைச்சரிடம் கோரி வருகிறோம்.
பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு: மாணவர்கள் ஹேப்பி!
அதற்கான மனுவை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்யப்பட்டது, அதன்படி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவிடம் கொடுத்துள்ளோம்” என்று தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் தாஸ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி