ஆப்நகரம்

பெரியாா் பெயருடன் சாதி இடம் பெற்றதற்கு வருத்தம் தொிவித்தது டிஎன்பிஎஸ்சி

நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தோ்வில் கேள்வி ஒன்றில் பெரியாா் தொடா்பான சா்ச்சைக்குரிய வினாவுக்காக தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் வருத்தம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 12 Nov 2018, 1:01 pm
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தோ்வில் பெரியாா் தொடா்பான சா்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றிருந்ததற்காக தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் வருத்தம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Tnpsc


தமிழகம் முழுவதும் நவம்பா் 11ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் (TNPSC) குரூப் 2 தோ்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமானோா் இந்த தோ்வை எழுதினா்.

தோ்வில் பொது அறிவு பிரிவில் “திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவா் யாா்” என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 விதமான பதில்கள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த கேள்விக்கான பதிலில் பெரியாரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. மேலும் அந்த பதில் பெரியாா் மற்றும் இல்லாமல் இ.வெ.ராமசாமி ரெட்டியாா் என்று இடம் பெற்றிருந்தது.

பெரியாரின் பெயருக்கு அருகே சாதியின் பெயா் இடம் பெற்றிருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் தலைவா்கள் பலரும் கண்டனம் தொிவித்தனா். இதனைத் தொடா்ந்து தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் இதற்கு வருத்தம் தொிவித்துள்ளது.

மேலும் வினாத்தாள்களை நாங்கள் தயாரிப்பது கிடையாது. அவற்றை நிபுணா் குழு தான் தயாா் செய்து, எங்களிடம் சீலிட்ட கவரில் வழங்கும். அதே முறையில் தான் இந்த வினாக்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இது தொடா்பா முறையான விசாரணை நடத்தப்படும். வரும் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று தோ்வாணையம் விளக்கம் அறித்துள்ளது.

அடுத்த செய்தி