ஆப்நகரம்

இன்னும் ஒரு வாரம் தான்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

தமிழ்நாட்டில் அடுத்த சில நாள்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 3 Feb 2021, 12:49 pm
பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 7 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil dry weather


அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
சசிகலாவை ஜெயலலிதா முன்னால் விமர்சித்த கே.பி.முனுசாமி: ஒரு பிளாஷ் பேக்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்றும் நாளையும் (பிப்ரவரி 3, 4) மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சசிகலா ரிட்டர்ன்ஸ்: இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?
இன்று (பிப்ரவரி 3) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி