ஆப்நகரம்

தமிழகத்தில் அடுத்து எப்போது மழை பெய்யும்- வானிலை மையம் மகிழ்ச்சி செய்தி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 21 Jun 2019, 12:51 pm
தமிழ்நாடு வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. தலைநகர் சென்னையில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil IMD


கடந்த ஆண்டே பருவமழை பொய்த்துவிட்ட சூழலிலும், நடப்பாண்டிற்கான தண்ணீர் தேவைக்கு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சூழலில் நேற்று சென்னையில் திடீரென பெய்த மழை பெய்தது.

சுமார் 190 நாட்களைக் கடந்து பொழிந்த மழையால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் இது குடிநீர் ஆதாரத்திற்கு போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தென்மேற்கு பருவமழைக்காக தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழையின் வடக்கு நோக்கிய நகர்வு தடைபட்டிருந்தது.

தற்போது தென்மேற்கு பருவமழை நகர்ந்துள்ள நிலையில், வெப்பம் படிப்படியாக குறையும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும். மீனம்பாக்கத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி