ஆப்நகரம்

தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை

பிறை தென்படாததால், தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதாக, தலைமை காஜி அறிவித்துள்ளார்.

TNN 5 Jul 2016, 9:16 pm
பிறை தென்படாததால், தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதாக, தலைமை காஜி அறிவித்துள்ளார்.
Samayam Tamil tamil nadu ramadan festival to be observed on thursday
தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை


புனித ரமலான் பண்டிகையை கொண்டாட, இஸ்லாமிய மக்கள் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், அரபு நாடுகள் மற்றும் வட இந்திய பகுதிகளில் ரமலான் பண்டிகைக்கு முந்தைய நாளில் தோன்றும் பிறை தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரமலான் பண்டிகை கொண்டாடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பிறை தென்படாததை அடுத்து, ரமலான் பண்டிகை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்படுவதாக, தலைமை காஜி அறிவித்துள்ளார். புதன்கிழமையன்று வழக்கம்போல, ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் அனுசரிக்க வேண்டும் என்றும் கூறிய தலைமை காஜி, வியாழனன்று ரமலானை வரவேற்க அனைவரும் தயாராக இருக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி