ஆப்நகரம்

சுகாதாரம், நலமான வாழ்விற்கான அம்சங்களில் தமிழகம் முன்னேற்றம் - நிதி ஆயோக்!

சென்னை: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுகாதாரத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது.

TIMESOFINDIA.COM 2 Jan 2019, 12:49 pm
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வறுமை, பாலின சமத்துவம், வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொழில், புதுமை, உள்கட்டமைப்பு, சுகாதாரம், நலமான வாழ்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு நிதி ஆயோக் அளவீடு செய்து வருகிறது. சுகாதாரத்தில் குழந்தைகள் நலம், நோய் பரவல், சாலை விபத்துகள் உள்ளிட்டவை அடங்கும்.
Samayam Tamil Health


இந்நிலையில் இதற்கான புள்ளி விவர பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. அதில் 92 புள்ளிகள் உடன் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து 77 புள்ளிகளுடன் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. 73 புள்ளிகளுடன் தெலங்கானா 3வது இடம், 71 புள்ளிகளுடன் பஞ்சாப் 4வது இடத்தில் உள்ளன. தேசிய சராசரி 52 புள்ளிகள் ஆகும். 10 மாதங்களுக்கு முன்பு தமிழகம் 3வது இடத்தில் இருந்தது.

இதுகுறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு சுகாதாரமான வாழ்வை அளிக்க மாநில அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாய், சேய் நல விவகாரத்தில் மிகச்சிறந்த செயல்திட்டங்களை வகுத்துள்ளோம். பெண்கள் ஆரோக்கியம் மேம்படம் உரிய நிதியுதவி அளிக்கப்படுகிறது.

மாநிலத்தின் 60% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது என்றார். தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 66 என்ற அளவில் தமிழகத்தில் உள்ளது. இதில் தேசிய சராசரி 130 ஆகும். கேரளா மிகக்குறைவாக 46ஐக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரா 61 பெற்றுள்ளது. இந்த மூன்று மாநிலங்களும் 2030ல் 70 என்ற அரசின் இலக்கை தற்போதே எட்டியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், 5 வயதுக்கு கீழான குழந்தைகள் இறப்பதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக, எலும்புறுக்கி, போலியோ போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தொடக்க நிலையிலேயே களைய இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி