Cauvery Water: கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி!
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 66,000 கன அடியில் இருந்து தடாலடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Samayam Tamil 11 Sep 2019, 11:00 am
ஹைலைட்ஸ்:
- காவிரியில் தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
- ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கே.ஆர்.எஸ் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 67,931 கன அடியாக இருந்தது.
கோவையில் பிறந்த குழந்தையின் தொடையில் சிக்கிய ஊசி: நர்ஸ் அலட்சியம்!!
இதன்மூலம் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்து கொண்டிருக்கிறது. இங்கு நேற்று மாலை நீர்வரத்து 66,000 கன அடியாக காணப்பட்டது.
இன்று முதல் சோதனை ஓட்டம்; 7 ஆண்டுகளுக்குப் பின் இருவழிப் பாதை ஆகும் அண்ணா சாலை!
இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லில் வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இமானுவேல் சேகரனை நினைவு கூர்வோம்!
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து 35வது நாளாக அருவியில் குளிக்கவும், 7வது நாளாக பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பிறந்த குழந்தையின் தொடையில் சிக்கிய ஊசி: நர்ஸ் அலட்சியம்!!
இதன்மூலம் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்து கொண்டிருக்கிறது. இங்கு நேற்று மாலை நீர்வரத்து 66,000 கன அடியாக காணப்பட்டது.
இன்று முதல் சோதனை ஓட்டம்; 7 ஆண்டுகளுக்குப் பின் இருவழிப் பாதை ஆகும் அண்ணா சாலை!
இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லில் வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இமானுவேல் சேகரனை நினைவு கூர்வோம்!
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து 35வது நாளாக அருவியில் குளிக்கவும், 7வது நாளாக பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.