ஆப்நகரம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 939 பேர் டிஸ்சார்ஜ்..! - விஜயபாஸ்கர்

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு இன்றோடு 6 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 May 2020, 6:37 pm
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் காணொளி வாயிலாக கொரோனா பாதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil விஜயபாஸ்கர்


இதில் 93 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து வந்த 81 பேருக்கு இன்று தொற்று கன்றையப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 332 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்படும் ஊரடங்கு: என்னென்ன இயங்க வாய்ப்புகள் உள்ளன?

இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 3 பேர் பலியாகியுள்ளதால் இதுவரை தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 939 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக புதிய கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவித்த விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் 15 நாட்களாகவும், கோவையில் 13 நாட்களாகவும், சேலம் மற்றும் திருவாரூரில் 10 நாட்களாகவும், நாமக்கல் மற்றும் நீலகிரியில் 7 நாட்களாகவும், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரில் 6 நாட்களாகவும் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இதுவரை இல்லை என கூறினார்.

அடுத்த செய்தி