ஆப்நகரம்

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா - சென்னையிலும் அதிகரிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,964 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 11 Aug 2021, 7:38 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் மேலும் 1,964 பேருக்கு கொரோனா
  • 28 பேர் உயிரிழப்பு மற்றும் 1,917 பேர் டிஸ்சார்ஜ்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Corona
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,964 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1 ஆயிரத்து 964 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,121 பேர் ஆண்கள், 843 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 81 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 243 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றை விட, இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
மதுப்பிரியர்களுக்கு செக்: "சரக்கு" வாங்க இனி தடுப்பூசி கட்டாயம்!
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 23 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 1 ஆயிரத்து 917 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநில முழுவதும், 20 ஆயிரத்து 382 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி