ஆப்நகரம்

மகாராஷ்டிராவின் பாதிப்பு தமிழகத்தில் எதிரொலி..! இன்றோடு 18,545 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 800ஐ கடந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

Samayam Tamil 27 May 2020, 7:14 pm
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 138 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். ஒருத்தர் கேரளாவிலிருந்து வந்துள்ளார். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை


இன்று மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் இன்று 567 பேர். இதுவரை தமிழகத்தில் 9,909 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 558 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை!

இதனால் சென்னையில் இதுவரை 11 ஆயிரத்து 645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நாளில் தமிழ்நாட்டில் கொரோனவால் சிகிச்சையிலும், மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பவர்கள் எண்ணிக்கை 8500 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி