ஆப்நகரம்

அதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..! இன்று 3 பேர் பலி...

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 3 பலியாகியுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை எட்டியுள்ளது.

Samayam Tamil 13 May 2020, 7:59 pm
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன்படி, இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் கொரோனா பாதிப்பு


இன்று 42 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி 2176 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனாவின் மையப்புள்ளியாக இருக்கும் சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் மொத்த எண்ணிக்கை 5262 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 58 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. தற்போது வரை 6984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்த செய்தி