ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ் ..!

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 May 2020, 7:04 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தினந்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மேலும் தமிழகத்தில் 743 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையானது 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil tamil nadu corona cases


இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 5882 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகியுள்ளனர். இந்நாள் வரை கொரோனவால் தமிழகத்தில் 87 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னையில் அதிகபட்சமாக 557 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மண்டலங்களில் 8 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுத்தி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி