ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 62 பேர் பலி, 2,212 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் இன்றைய கொரோன பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 29 Jun 2020, 6:59 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை நாள்தோறும் தெரிவித்து வருகிறது. அதன்படி, இன்று மேலும் 3,949 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86224 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil coronavirus tamil nadu


சென்னையில் இன்று அதிகபடச்சமாக 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக 62 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் 1,141 பேர் பலியாகியுள்ளனர்.


அராஜகமும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், தூசி தட்டப்படும் சாத்தான்குளம் அட்டூழியங்கள்...

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் தற்போது 37,331 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி