ஆப்நகரம்

பணக்காரங்க இறக்குமதி செய்த நோய் கொரோனா..! திமுக டார்ச்சருக்கு முதல்வர் ரியாக்‌ஷன்...

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றோடு 1,267ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Apr 2020, 3:59 pm
தமிழகத்தில் இன்றைய கொரோனா குறித்த விவரங்களை முதல்வர் பழனிசாமி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; தமிழகத்தில் மார்ச் 7ம் தேதிதான் முதன் முதலில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவுவதற்கு முன்னரே ஜனவரி 23ம் தேதியிலிருந்து விமான நிலையங்களில் கொரோனா அறிகுறி பரிசோதனை நடத்தப்பட்டது.
Samayam Tamil முதல்வர் பழனிசாமி


நோய் தடுப்பு பணியை மேலும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அரசின் அறிவுரைகளை ஏற்று நடக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 835. பரிசோதனை முடிவுகள் வரப்பட்டவை 16 ஆயிரத்து 452. வரவேண்டிய முடிவுகள் 1383.

இன்று 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 1,267ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் குறைந்துகொண்டே வருகிறது. இன்னும் கூடிய விரைவில் கொரோனா மொத்தமாக தமிழ்நாட்டில் குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு காளை இறுதி ஊர்வலத்தில் 3000 பேர் பங்கேற்பு!

முதல்வரின் இந்த திடீர் செய்தியாளர் சந்திப்பு எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைளை விமர்சித்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்தில் காய்கறிகளின் விலை வாசி கடுமையாக உயர்ந்துவிட்டதாக கூறினார்.

ஆனால், அதற்கு முதல்வர் தமிழகத்தில் காய் கறிகள் எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, எந்த பொருட்களின் விலையெல்லாம் குறைந்துள்ளது என்பதை பட்டியலிட்டு பேசினார். கொரோனாவுக்கும் ஏழை மக்களும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், பணக்காரர்களிடம் பேசுவதுதான் பயமாக இருக்கிறது. அவர்கள்தான் வெளிநாடுகளுக்கு சென்று கொரோனாவை இறக்குமதி செய்துவிட்டனர் என்றார்.

அடுத்த செய்தி