12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி மாதம் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. தொடர்ந்து 9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் நேரடி வகுப்புகள் தொடங்கின.
திமுக கூட்டணி அமோக வெற்றி: கருத்துக் கணிப்பு முடிவு!
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அட்டவணையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே 10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதால் அதில் மாற்றம் ஏற்படுமா என்றும் கேள்விகள் வலம் வரத் தொடங்கின.
அதிமுகவில் யார் யாருக்கு சீட் இல்லை? எடப்பாடி கொடுத்த ஷாக்!
இந்நிலையில் மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணி அமோக வெற்றி: கருத்துக் கணிப்பு முடிவு!
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அட்டவணையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே 10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதால் அதில் மாற்றம் ஏற்படுமா என்றும் கேள்விகள் வலம் வரத் தொடங்கின.
அதிமுகவில் யார் யாருக்கு சீட் இல்லை? எடப்பாடி கொடுத்த ஷாக்!
இந்நிலையில் மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.