ஆப்நகரம்

பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்: இந்த விஷயத்தில் தாமதம் கூடாது!

பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழை தாமதமின்றி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 13 Jun 2022, 6:38 am
தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கல்வி ஆண்டின் முதல் நாளான இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு செல்கின்றனர். 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TN Schools


அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை, பள்ளி மேலாண்மை குழுக்களுடன் ஆலோசித்து அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என்றும், 8 பாட வேலைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாற்று சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

"பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்குத் தாமதமின்றி மாற்று சான்றிதழ் வழங்கிட வேண்டும். இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து மாற்று சான்றிதழ் கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும்” என்றுஅனைத்து அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
TN Govt Sunday SPL:ராதாகிருஷ்ணன், பிரியதர்ஷினி உட்பட 51 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
மேலும் மாற்று சான்றிதழ் வழங்கும் பணிகளை இன்றும் நாளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் இன்றைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8 ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் மாற்று சான்றிதழ் பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்!
இது தவிர, கல்வி உரிமை சட்டத்தின் ( RTE - Right To Education) கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி