ஆப்நகரம்

ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு: உடனே இதை பண்ணிடுங்க!

பள்ளிகளில் நிலுவையில் உள்ள கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 31 Jul 2021, 3:47 pm
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் மட்டுமே பாடங்களை கற்று வருகின்றனர்.
Samayam Tamil tn school teachers


இரண்டாம் அலை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல மாநிலங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்தும் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 20 பள்ளிகள் திறப்பு? முதல்வர் வெளியிடும் அறிவிப்பு?
இந்த சூழலில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்துகொண்டு பேசினார்.

“ஒரு கி.மீ., தொலைவில் தொடக்க பள்ளிகள் மற்றும் 3 கி.மீ தொலைவில் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணையத்தளத்தில் அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சிக்னல்; களத்தில் இறங்கிய பிடிஆர்!
கரூர் அருகே ஒரே ஆசிரியர், 450 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளார்.அதேபோல், பிற ஆசிரியர்களும் பெற்றோரை அணுகி மாணவர்களை ஊக்குவித்து, சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தனியார் பள்ளியில் இருந்து சேர விரும்புவோரை மறுக்காது சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், 'ஹைடெக்' ஆய்வகம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பள்ளி கட்டடம் கட்டி முடிக்காத நிலையில் இருந்தால் உடனே கட்டி முடிக்க வேண்டும். கழிவறைகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாஎன ஆய்வு செய்வது அவசியம்” என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி