ஆப்நகரம்

தமிழகப் பள்ளிகள் திறப்பும், கருத்து கேட்பு கூட்டமும் - புதிய உத்தரவு!

பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவற்றை சமர்பிக்கப்படுவது தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Jan 2021, 8:35 am
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் 1,000க்கும் கீழ் குறைந்திருக்கின்றன. அதைவிட அதிகமான எண்ணிக்கையில் குணமாகி வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை இருக்கிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களிடம் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கான நம்பிக்கை பிறந்துள்ளது. இதற்கிடையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளது.
Samayam Tamil tamil nadu school head masters should submit parents feedback for school reopen by today evening
தமிழகப் பள்ளிகள் திறப்பும், கருத்து கேட்பு கூட்டமும் - புதிய உத்தரவு!


பள்ளிகளுக்குள் புகுந்த கொரோனா

ஆனால் பெற்றோர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பால் தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கருத்து கேட்பு கூட்டம்

எனவே தமிழகப் பள்ளிகள் திறப்பில் மாநில அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். இந்த சூழலில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.


பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழக அரசு முடிவு

அதில் வரும் 8ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க வேண்டும். இதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதலை முதன்மை கல்வி அலுவலர்கள் அளிக்க வேண்டும். இதுகுறித்து அறிக்கை தயார் செய்து சி.இ.ஓக்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கருத்து கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துப்பூர்வ ஒப்புதல்

இதையடுத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளொன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதில், பள்ளிகளைத் திறந்தால் பிள்ளைகளை அனுப்புவீர்களா? அனுப்ப மாட்டோம் என்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவும். பள்ளிகளைத் திறக்கலாமா? திறப்பை ஒத்தி வைக்கலாமா? அதற்கான காரணம் என்ன? உள்ளிட்டவை கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டு வருகிறது.

முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவு

இதில் பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்த சூழலில் பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அடங்கிய அறிக்கையை இன்று (ஜனவரி 7) மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் சமர்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொங்கலுக்கு மாஸ்டர் புஸ்வானம் ஆகிடுமோ? வலுக்கும் எதிர்ப்புகள்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு?

அதாவது ஏற்கனவே உத்தரவிடப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே கருத்து கேட்பு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று தெரிகிறது. இதில் பள்ளிகளை திறக்கலாம் என்று பெரும்பாலான பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இருப்பினும் தமிழகப் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை ஆன்லைன் வாயிலான கல்வியே தொடரும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி