ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் நடத்தும் ஆலோசனை!

கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில் அடுத்த கட்ட பொது முடக்கம் குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

Samayam Tamil 29 Sep 2020, 11:28 am
கொரோனா பரவல் காரண்மாக ஆறு மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. பாதிப்புகள், மக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதும், தளர்வுகள் அறிவிக்கப்படுவதும் ஒவ்வொரு மாத இறுதியிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.
Samayam Tamil edappadi palanisamy


இ பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி ஆகிய முக்கிய அறிவிப்புகள் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் இந்த மாதம் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு அறிவிப்பின் போதும் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வார். அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

பள்ளிகள் திறக்கப்படாது: தமிழக அரசின் முடிவில் மாற்றம்!

அதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளிக்கும் போது முதல்வர் ஆலோசனை நடத்தி அறிவிக்கவுள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி