ஆப்நகரம்

பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Samayam Tamil 27 Jan 2022, 7:56 pm
தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil பள்ளிகள் திறப்பு


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இத்துடன் பள்ளிகள், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்கிறோம்.. வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!
மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி