ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு: என்ன சொல்கிறார்கள் பெற்றோர்கள்?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பதற்கான பதில் நேற்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் காரணமாக விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 10 Nov 2020, 9:51 am
கொரொனா பரவல் முடிவுக்கு வராத நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கருதி பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதே சமயம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஏழு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tn school open


மத்திய அரசு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என அனுமதி வழங்கினாலும் கொரோனா நிலவரம் காரணமாக அதற்கான சூழல் உருவாகவில்லை என கல்வியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளை திறந்து வருவதால் தமிழ்நாடு அரசும் நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களும், மாணவர்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருவதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் உருவானது.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க கூடாது என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு முடிவெடுப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக பள்ளிகள் திறப்பு உறுதி? குடும்ப நலத்துறை புதிய உத்தரவு!

அந்த வகையில் நேற்று அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் காலை தொடங்கி நடைபெற்றது. கூட்டம் நடப்பதையொட்டி பள்ளிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. முகக் கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளி பேணப்பட்டு வகுப்பு வாரியாக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கபட்ட விஷயங்களை தலைமை ஆசிரியர் மாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தினார்.

திமுக ஜாதகம் ஐ பேக் கையில்: ஆபத்தை உணர்வாரா ஸ்டாலின்?

பல்வேறு பள்ளிகளிலிருந்து வரும் கருத்துகளை பதிவு செய்து அதன் மூலம் இறுதி முடிவுக்கு அரசு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களில் பள்ளிகள் திறக்க ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பெற்றோர்கள் கலவையாக பதிலளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி