ஆப்நகரம்

தமிழகப் பள்ளிகள் திறப்பு: தூய்மைப் பணிகளும், கவுன்சிலிங் வகுப்புகளும்!

நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Samayam Tamil 18 Jan 2021, 11:20 am
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசு பலமுறை ஆலோசனை நடத்தியது. இதையொட்டி கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பெற்றோர்களிடம் நடத்திய கருத்து கேட்புக் கூட்டத்தில், பள்ளிகளை திறக்க பெரும்பாலானோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்தன. இதன் அடிப்படையில் பொதுத்தேர்வைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை (ஜனவரி 19) முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
Samayam Tamil TN School Reopen


ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 25 மாணவர்கள் மட்டுமே அமரலாம். பள்ளி விடுதிகள் திறக்கப்பட்டு மாணவர்களை தங்க வைத்துக் கொள்ளலாம். உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வண்ணம் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் சுகாதாரத்துறை அமைச்சகம் மூலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

என்னது பாடத்திட்டம் பாதி படிச்சா போதுமா? தமிழக மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!
இந்த சூழலில் பொதுத்தேர்விற்கு தயாராகும் வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக SCERT அமைத்த 18 பேர் கொண்ட குழுவினர் 40 சதவீத பாடத்திட்டங்களை நீக்கியுள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் கற்க வேண்டிய பாடத்திட்ட விவரங்களை மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் TNSCERT இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும். நேரமிருந்தால் எஞ்சிய பாடங்களையும் முடிக்கலாம். போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அந்தந்த தேர்விற்கு ஏற்ப பாடத்திட்டங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

என்ன ஆண்டவரே, இப்படி பண்ணிட்டீங்க?: கமல் மீது ரசிகர்கள் கோபம்
ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர். நாளை மற்றும் அதற்கடுத்த நாள் என இரண்டு நாட்கள் வகுப்புகள் நடத்தாமல் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா அச்சத்தில் இருந்து மாணவர்களை விடுவித்து தைரியமாக கல்வி கற்க வழி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளிச் சீருடையில் பழைய பஸ் பாஸ் உடன் மாணவர்கள் வந்தாலே அரசுப் பேருந்துகளில் இலவச அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி