ஆப்நகரம்

chennai rain: பொதுமக்கள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ள பெருக்கு முன்னெச்சரிக்கையாக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 16 Nov 2020, 8:10 pm
தமிழகத்தில் தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட
Samayam Tamil கோப்புப்படம்

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

அதே சமயம், சென்னையின் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீரின் கொள்ளளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக 24 அடி நீர்மட்டத்தை கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதற்கு இன்னும் 3 அடிகளே உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

முன்னதாக இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், '' செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியாக உள்ள நிலையில், தற்போது நீர்மட்டம் 21.6ஆக பதிவாகியுள்ளது. தலைமை செயலர், பொதுப்பணி துறை செயலர் மற்றும் சுகாதாரத் துறை செயலர் அனைவரும் கலந்து பேசியுள்ளோம்.


வெள்ளப்பெருக்கு காலங்களில் சமாளிப்பதற்கும், மக்களின் குடிநீர் தேவைகளையும் கருத்தில்கொண்டு, நீர்மட்டம் 22 அடியை தொட்டவுடன், குறைவான அளவில் நீரை திறந்துவிட கலந்தாலோசித்துள்ளோம்'' என தெரிவித்தார்.

நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி..! தனது கொள்ளளவில் 76% எட்டியது..!

இந்த நிலையில், பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், '' வெள்ளக் காலங்களில் பொது மக்களுக்கு வேண்டுகோள்; பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள், எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்சுகள், முகக்கவசங்கள்'' ஆகியவற்றை வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி